"தேவதாயின் அற்புத வரலாறு"
இம் மூன்றாம் மிலேனியம் தோற்றுவித்துள்ள உலகின் போலிச் சுபபோகங்களையும் வாழ் வாழ்வின் முக்கிய தேடலாகக் கொண்டு. இன்றைய மக்கள் அலைகின்றனர். தொடர்பு சாதனப் புரட்சிகள், புலம்பெயர் தமிழர் கொணரும் பணச்செருக்கு, சினிமா தொலைக்காட்சி நுகர்வுக் கலாச்சாரம் போன்றவை ஏற்படுத்தியுள்ள காமவெறி, கொலை ( சிசுக்கொலை உட்பட) கலாச்சாரம் அத்தனையையும் எம் கிறிஸ்தவ விசுவாசத்தை வேரறுக்கத்தொடங்கி விட்டன.
இவற்றின் முக்கிய வெளிப்பாடாக, வசீகரம், மாந்திரிகம், சோதிடம், போலித் தெய்வ வழிபாடுகள் போன்றவை தலைவிரித்தாடுகின்றன.
இவற்றிற்கான மாற்று வழியை திருச்சபைக்கு யார் கொடுப்பார்?. இதுவரை தேவதாயின் 150 க்கு மேற்பட்ட அற்புத தரிசனங்கள் இடம்பெற்றுள்ளன.
பாத்திமவிலும், ஏனைய தரிசனங்களிலும் செப தப பரித்தியாக வாழ்விற்கு, நம்மை அர்ப்பணிப்போம். அவள் நசரேத்திலும், பின் கலிலேயாவிலும், ஜெருசலேமிலும், இறுதியில் எபேசிலும் வாழ்ந்த, அற்புத தெய்வீக வாழ்வு, மோட்ச வீட்டின் முன் சுவை. அதில் உட்புக "தேவதாயின் அற்புத வரலாறு" உங்களை வரவேற்கிறது.
இப்புத்தகத்தை மொழிபெயர்த்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுவாமி ஜே. இ. ஜெயசீலனுக்கும் எம் நன்றிகள்.
தொடர்ந்து வாசிக்க .... |