Home | History | 15 Blessings | Eucharistic Miracle | Prayers | Contact

     

 

 

Previous

மானிடத்தின் மனச்சாட்சி

மானிடா !!
மகத்தானது....
மயக்கமானது.....
மாயையானது....
மறைபொருளானது.....
காலை தோன்றி மாலை மறையும்
மலர் போன்றது - மானிடவாழ்வு

உன்
பலங்களைக் கண்டு கொள்....
பலவீனங்களை தெரிந்து கொள்....
உனதென ஏற்றுக் கொள்....
பிழைகளை திருத்திக் கொள்.......
தவறுக்கு வருந்திக் கொள்....
அங்கிருந்து எழுந்து கொள்......

உன்னை நீயாக ஏற்றுக் கொள்.....
உனக்கான பாதைகளை
வகுத்துக் கொள்.......
உதவிக் கரங்களை
அணைத்துக் கொள்......
அடுத்தவர் பாசாங்கை
தவிர்த்துக் கொள்.......

மற்றவர்களை அவ்வாறே
ஏற்றுக் கொள்....
தனித்துவம் பேண
வழிசெய்து கொள்.....
வழிமாறும் போது
வழி காட்டிக் கொள்......
சரிவுகளை ஏற்றுகொள்.......
ஏழ்மையை ஏற்றுக் கொள்........

சரியானதை
அறிந்து கொள் மானிடா.......
தெரிந்து கொள் மானிடா...........
ஏற்றுக்கொள் மானிடா.........
மாற்றிக் கொள் மானிடா.........
முயற்சி கொள் மானிடா.....
வளர்ச்சி கொள் மானிடா....
மனிதம் முழுமை பெறக்
காண்பாய்...........................

....................................................................

உங்களின் கருத்துக்களையும் கீழே தெரிவிக்கலாம்

HTML Comment Box is loading comments...

Send us your articles : tamilrosary@gmail.com