மாக்கிறர் மேரி அலகோ - அழியாத உடல் புனித மாக்கிறட் மேரி அலகோ 1647, ஜூலை 22இல் பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். குழந்தையாக இருக்கும்போது தேவதாயாரின் காட்சியில் அவருடைய உடல் நிலை முழுமையான சுகம் பெற்றது. இன்னும் ஒருமுறை இயேசு கற்றுணிலே கட்டுண்டு அடிபட்ட காட்சியைக் கண்டு கன்னியர் மடத்தில் இணைந்து கன்னியரானார். இவர் தன்னுடைய வாழ்க்கையில் பல தேவ அன்னையின் தரிசனங்களைப் பெற்றார். அத்தோடு இறைவெளிப்பாடுகளையும் பெற்றார். பல இறைவெளிப்பாடுகளில் ஒன்றுதான் இயேசுவின் திரு இதயத்தில் பக்தி வைத்திருப்பவர்களுக்கு 12 ஆசீர்களைக் கொடுப்பதாகக் கூறியுள்ளார். இந்த பக்தி முயற்சி பல எதிர்ப்புக்களை தொடக்கத்தில் சந்தித்தாலும், இன்று உலகம் பூராகவும் பரவி இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இவரது அழிய இதயமும், மூளையும் இன்றும் அழியாது இருக்கின்றது. இவற்றை ப்ரான்ஸ் நாட்டில் உள்ள கன்னியர் மடத்தில் காணலாம்.
Send us your articles : tamilrosary@gmail.com |
