பெனின் நாட்டில் திருத்தந்தை
“ஆப்ரிக்க நாடு நம்பிக்கை தரும் ஒரு நாடு. இங்கு காணப்படும் பல்வேறு மதிப்பீடுகள் உலகிற்கு நல்ல பல பாடங்களை வழங்கவல்லது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.”
ஆப்ரிக்கக் கண்டத்தின் பெனின் நாட்டில் தனது திருப்பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை, மூன்று நாட்களின் பின் ஞாயிறு மாலை Cotonou விமான நிலையத்தில் அம்மக்களிடமிருந்து பிரியாவிடை பெற்றார்.
கர்தினால் Bernardin Gantin விமான நிலையத்தில் பெனின் நாட்டு அரசுத் தலைவர் தாமஸ் போனி யாயி திருத்தந்தைக்கு பிரியாவிடை வாழ்த்துக்களைக் கூறினார்.
அந்நாடு பல்வேறு கலாச்சாரங்களையும், மதங்களையும் கொண்டுள்ளது, மற்றும் அரசுக்கும் திருச்சபைக்கும் இடையே நல்லுறவு உள்ளது என்பதை எடுத்துக் கூறினார்.
ஆப்ரிக்க ஆயர்கள் வழியாக மக்களுக்கு வழங்கியுள்ள Africae Munus என்ற அப்போஸ்தலிக்க ஏட்டை எல்லோரும் கற்கவேண்டும் என்பது தமது விருப்பு என்றும் கூறினார்,
அன்னை மரியாவின் பாதுகாவலில் ஆபிரிக்காவை ஒப்படைப்பதாகக் கூறி, உரோம் நகர் நோக்கிப் புறப்பட்டார்.
facebook comments:













7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





